Saturday, 21 March 2015

Kavithai - 81

ஆடை



மானிட மானத்தைக் காப்பாற்றி,
அவர்களுக்கு அழகும் ஊட்டுவதே,
நேசவர் நெய்யும் ஆடையாகும்.
காதலர்கள் ஒழுக்கத்தை காப்பாற்றி,
வாழ்க்கைக்கு பொலிவூட்டும்,
காதல் திருமணமும் ஓர் அழகிய ஆடையே !!



சிநேகிதம்


ஒரு நாளைய சிநேகிதம்
இரயில் சிநேகிதம்.
வாழ்நாளைய சிநேகிதம்
உயிர் சிநேகிதம்.
பேராசையோடு வரும் சிநேகிதம்
உயில் சிநேகிதம்.
இதயத்தோடு வரும் சிநேகிதம்
மெய் சிநேகிதம்.

பயணத்தோடு முடியும் சிநேகிதம்
இரயில் சிநேகிதம்.
மரணத்தோடு முடியும் சிநேகிதம்
உயிர் சிநேகிதம்.
பணத்தோடு முடியும் சிநேகிதம்
உயில் சிநேகிதம்.
மணத்தில் "முடிவது"
மெய் காதல் சிநேகிதம் !!



விசித்திரம் 



உலகம் பேசும் மொழிகள்
பல்லாயிரம் ; ஆனால்,
காதலர்களை எதிர்த்து
வந்ததே அதன் சரித்திரம்.

காதலர்கள் பேசுவதோ
மௌன மொழி; அதைக்கொண்டே
காவியம் பல படைத்து
வாழ்ந்ததே அதன் விசித்திரம்.





புனிதம் 



இமயம் போல் உயர்ந்த
மனதிலே உள்ளது,
இதயம் என்னும்
புனித கோவில்.

அக்கோவிலை அடைந்தது
ஒரே ஒரு பெண்மணி;
அவள்தான் அதில் வாழும்,
என் ஆசை கண்மணி.



No comments:

Post a Comment