Saturday, 18 April 2015

காரமும் சாரமும்


காரமும் சாரமும்


காரம் 


பதவியில் உள்ளோர் செய்யும் காரம்       -    அதிகாரம்
பசிக்கு தேவையான காரம்                            -   ஆகாரம்
பாவத்துக்கு தேடும் காரம்                              -    பரிகாரம்
பெண்களுக்கு தேவையான காரம்              -    அலங்காரம்
பார்வைக்கு அழகில்லாத காரம்                   -    விகாரம்



சாரம் 


அன்றாட வாழ்வுக்கு தேவையான சாரம் -     மின்சாரம்
நாம் கேள்விபடும் சாரம்                                   -     சமாசாரம்
கணவனின் மறுபாதி சாரம்                             -     சம்சாரம்


ஊர் பெயர்கள் (1 முதல் 10 வரை)

ஒன்று முதல் பத்து வரை எண்களைக்கொண்ட ஊர் பெயர்கள்  :




1. ஒத்தக்கடை      (மதுரை)
2. இருமேனி           (இராமநாதபுரம்)
3. மூன்றடைப்பு    (நெல்லை)
4. நாலுமாவடி        (தூத்துக்குடி)
5. அஞ்சுகிராமம்    (குமரி)
6. ஆறுமுகநேரி     (நெல்லை)
7. ஏழுமலை            (மதுரை)
8. எட்டையாபுரம்   (சிதம்பரனார்)
9. நவபட்டி                 (சேலம்)
10.பெரும்பத்து         (நெல்லை)

Friday, 17 April 2015

சொல்லுதல்

"சொல்லுதல்" என்பதற்கு தமிழில் 38 சொற்கள் இருக்கின்றன.
இங்கே அவைகள் ;


1.  அசைத்தல்      -  அசையழுத்ததுடன் சொல்லுதல்.
2.  அறைதல்         -  'அடித்து' சொல்லுதல்.
3.   இசைத்தல்      -   ஓசை வேறுபாட்டுடன் சொல்லுதல்.
4.   இயம்புதல்      -   இசைக்கருவி இயக்கிச் சொல்லுதல்.
5.   இறுத்தல்         -  விடை கூறல்.
6.   உரைத்தல்     -   அருஞ்செற்கு பொருள் சொல்லுதல்.
7.   என்னுதல்      -  'என்று' சொல்லுதல்.
8.    உளறுதல்      -  ஒன்றிருக்க வேறொன்றை சொல்லுதல்.
9.   ஓதுதல்            -  காதிற்குள் மெல்லச் சொல்லுதல்.
10.  கத்துதல்         -  உரக்கச் சொல்லுதல்.
11.  கரைதல்          -  அழைத்துச் சொல்லுதல்.
12.   கழறுதல்        -  கடிந்து சொல்லுதல்.
13.   கிளத்தல்        -  இன்னதென்று குறியிட்டுச் சொல்லுதல்.
14.   குயிலுதல்     -  குயில் போல் இனிய குரலில் சொல்லுதல்.
15.   குழறுதல்       -   நாத் தளர்ந்து சொல்லுதல்.
16.   சாற்றுதல்       -  பலர் அறியச் சொல்லுதல்.
17.   செப்புதல்          -  வினாவிற்கு விடை சொல்லுதல்.
18.   நவிலுதல்       -  நாவினால் ஒலித்துப் பயிலுதல்.
19.  நுதலுதல்         -  ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்.
20.  நுவலுதல்       -  நூலின் நுண்பொருள் சொல்லுதல்.
21.  நொடித்தல்      -  கதை சொல்லுதல்.
22.  பகர்தல்             -  பண்டங்களைப் பகுத்து விலை சொல்லுதல்.
23.  பறைதல்          -  மறை (இரகசியம்) வெளிப்படுத்திச் சொல்லுதல்.
24.  பன்னுதல்        -   நிறுத்தி நிறுத்திச் சொல்லுதல்.
25.  புகலுதல்          -   விரும்பிச் சொல்லுதல்.
26.  புலம்புதல்        -   தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்.
27.  பேசுதல்             -   ஒரு மொழியில் சொல்லுதல்.
28.  பனுவுதல்          -   செய்யுளில் புகழ்ந்து சொல்லுதல்.
29.  மொழிதல்          -  இடைவிடாது சொல்லுதல்.
30.  மாறுதல்             -   உரையாட்டில் மாறிச் சொல்லுதல்.
31.  மிழற்றுதல்        -  மழலை போல் இனிமையாகச் சொல்லுதல்.
32.  மொழிதல்           -  சொற்களை தெளிவாக பெருக்கிச் சொல்லுதல்.
33.  வலத்தல்             -  கேட்பார் மனத்தைவிட்டுச் சொல்லுதல்.
34.  விடுதல்                -  மெள்ள வெளிவிட்டுச் சொல்லுதல்.
35.  விதத்தல்             -  சிறப்பாக எடுத்துச் சொல்லுதல்.
36.  விள்ளுதல்          -  வெளிவிட்டுச் சொல்லுதல்.
37.  விளத்துதல்         -  விவரித்துச் சொல்லுதல்.
38.  விளம்புதல்          -  ஓர் அறிவிப்பைச் சொல்லுதல்.
39.  வினவுதல்            -  கேள்வி கேட்டல்.

Kavithai 93 (கேட்டதில் பிடித்தது)


மரம் 

புதைத்தும் உயிரோடு மரம்.



வாய்க்கரிசி

 பட்டினியால் செத்தான்.
 விழுந்தது வாய்க்கரிசி !



மூக்குத்தி

மூக்கில் முகாமிடும்
மின்மினிப் பூச்சி !!



புத்தாண்டு 


புத்தாண்டு பிறந்தது -
புது காலண்டர்
வாங்க வேண்டுமே என்ற
முதல் கவலையுடன்.


கண்கள் 

உப்பு நீரை
உற்பத்தி செய்யும்
மினி தொழிற்சாலை !



புன்னகை 

கண்களால் எழுதப்படும்
கவிதைக்கு,
இதழ்களால் கொடுக்கப்படும்
இனிய சன்மானம் !!



காதலனின் புலம்பல் 

நீ தந்து சென்றது
உன் திருமண
அழைப்பிதழ் அல்ல -
நம் காதலின்
காகிதக்  கல்லறை !!


கடமை 

மண்ணில் மாதம் மும்மாரி
பெய்யாவிட்டாலும்,
ஏழைகளின் வயிற்றில்
தினம் மூன்று வேளை
பெய்கிறது அமிலமழை !!



மக்கள் பெருக்கம் 

பிரச்சினைகளின் பிரம்மா !!



கவிதை மகால்.

மும்தாஜ்
ஷாஜஹான்
தாஜ்மகால்.
நீ
நான்
என் கவிதை !


அம்மா 

துன்பத்தை
தன் பங்கிற்கும்,
இன்பத்தை மகன்
பங்கிற்கும் என
வித்தியாசமாய்
பாகம் பிரிப்பவள் !



நிலா 


வான்குமரி
மேகச்சேலையால்
மறைக்க முயலும்
மார்பகமோ !!!