ஒழுக்கம்
மனித உடலில்
உயிரை வைத்தபின்,
இறைவன் ஆறாம் அறிவை
வைத்தார் அவ்வுடம்பில்.
மிருகங்களில் அவ்வறிவை
வைக்க மறந்த இறைவன்,
நல்லொழுக்கம் என்னும்
வரத்தைக் கொடுத்தார் !!
ஏன்?
இறைவன், ஏழைகளிடம்
செல்வம் கொடுக்காதது ஏன்?
பேராசையின் வலையில்
சிக்கிவிடக்கூடாது என்பதற்கோ?
செல்வரிடம் ஈகைத்தன்மை
கொடுக்காதது ஏன்?
தருமத்தை நம்பியே ஏழை
வாழ்ந்துவிடக்கூடாது என்பதற்கோ?
சாபம்
ஆதியிலே மனிதனை
உருவாக்கிய இறைவன்,
அவன் காலடியில்
வைத்தான் முழு உலகை.
பாதியிலே இறைவனை
மறந்த மனிதன்,
வியாதியோடு கழிக்கிறான்
தன் முழு வாழ்வை !!
அழகு
இரை தேடி பறவை
பறப்பது எழில்மிக்க காட்சி.
கடல் நோக்கி நதி செல்வது
எழில்மிக்க காட்சி -
அழகு இயற்கைக்கு சாட்சி.
பசிபோக்க உழவர்
உழைப்பதும் எழில்மிக்க காட்சி.
உழைப்பால் உயர்வது
இயற்கையின் அழகு -
அதற்க்கு இவர்கள் சாட்சியே !!
மனித உடலில்
உயிரை வைத்தபின்,
இறைவன் ஆறாம் அறிவை
வைத்தார் அவ்வுடம்பில்.
மிருகங்களில் அவ்வறிவை
வைக்க மறந்த இறைவன்,
நல்லொழுக்கம் என்னும்
வரத்தைக் கொடுத்தார் !!
ஏன்?
இறைவன், ஏழைகளிடம்
செல்வம் கொடுக்காதது ஏன்?
பேராசையின் வலையில்
சிக்கிவிடக்கூடாது என்பதற்கோ?
செல்வரிடம் ஈகைத்தன்மை
கொடுக்காதது ஏன்?
தருமத்தை நம்பியே ஏழை
வாழ்ந்துவிடக்கூடாது என்பதற்கோ?
சாபம்
ஆதியிலே மனிதனை
உருவாக்கிய இறைவன்,
அவன் காலடியில்
வைத்தான் முழு உலகை.
பாதியிலே இறைவனை
மறந்த மனிதன்,
வியாதியோடு கழிக்கிறான்
தன் முழு வாழ்வை !!
அழகு
இரை தேடி பறவை
பறப்பது எழில்மிக்க காட்சி.
கடல் நோக்கி நதி செல்வது
எழில்மிக்க காட்சி -
அழகு இயற்கைக்கு சாட்சி.
பசிபோக்க உழவர்
உழைப்பதும் எழில்மிக்க காட்சி.
உழைப்பால் உயர்வது
இயற்கையின் அழகு -
அதற்க்கு இவர்கள் சாட்சியே !!
No comments:
Post a Comment