Wednesday, 14 January 2015

Kavithai - 41

உத்தரவு 



"மேகமே !!!
ஒற்றுமையற்று வீழும்
தமிழகத்தில்,
வறட்சியால் மக்கள் வாடி,
வறுமையே காண வேண்டும் !
வளமை காணாமல்
தவிக்கவேண்டும் !!

பிற நாடுகளுக்கு
பிழைப்பை தேடி சென்று
அங்கு பகைமையின்றி
ஒழுக்கத்துடன் வாழ
கற்று கொள்ளட்டும்",
என்று வான தெய்வர்களிடமிருந்து
உனக்கு உத்தரவோ !!!

Kavithai - 40

நினைவுகள்



உன்னை நான் மறந்திருப்பது,
என்னையே நான் மறந்திருக்கும்போது !

கண்கள் உன்னை காணாதிருப்பது,
காட்சியே காண மறந்திருக்கும்போது !!

நான் உன்னைக் காணாத நாள்,
பூமி சூரியனை காணாத நாளாகும் !!

என் கனவில் நீ வராத இரவு,
நான் தூங்காமலேயே கழித்த இரவாகும் !!




நம்பிக்கை 



நீ இல்லாத என் வாழ்க்கை 
வாழ்வன்று.
அது சிறகே இல்லாத 
பறவை ஒன்று !

உன்னை கனவிலும் நினைவிலும் 
காணாத நாள் என்று?
வாழ்கிறேன் நம்பியே,
இணைவோம் ஒரு நாள் என்று !!

Monday, 12 January 2015

Kavithai - 39

அமைதிக்கு விடுதலை 




அமைதியை என் மனச்சிறையில் 
கைதியாக அடைத்து வைத்திருந்தேன்.
ஆனால், அவள் என் வாழ்வில் வந்ததும்,
மகிழ்ந்து கொண்டது அமைதி  --
தனக்கு விடுதலை கொடுக்க 
அவள் வந்து விட்டாள் என்று !!!!

Kavithai - 38

ஒன்றே ஒன்று 




நாட்கள்         7ல்  ஒன்று     - ஞாயிறு.
சுவைகள்       6ல்  ஒன்று     - இனிப்பு 
பருவங்கள்    5ல்  ஒன்று      - வாலிபம் 
காலங்கள்     4ல்  ஒன்று      - வசந்தம் 
உலகங்கள்    3ல்  ஒன்று      - பூமி 
குணங்கள்     2ல்   ஒன்று      - நற்குணம்
காதலி           1றே ஒன்று      - மனைவி.

Kavithai - 37

மௌனம் சம்மதம் 




பாடி ஒரு பாட்டு, 
காற்றில் அனுப்பினேன் தூது.
பதில் வரவில்லை விரைந்து,
என் மனம் போனது உடைந்து.

காதல் கடிதம் எழுதினேன்,
காதலை அதில் வருணித்து.
நின்று எதிர்பார்த்தேன் பதில்,
வரவில்லை அது இசைந்து.

"காதலிக்கிறேன் உன்னை இடையத்தால்",
என்றேன் துணிந்து.
புன்னகைத்தாள் அவள்,
வெட்கத்தால் தலை குனிந்து !!

Kavithai - 25

ஐஸ்வர்யா ராய் 


ஆசை, ஆசையாக ஐஸ்வர்யா மீது,
ஆசை நான் வைத்தேன்.
அழகு அழகான வரிகளால்,
கவிமாலை அவளுக்கு நான் சூட்டினேன்.

ஆடிய மயிலும், அழகு குயிலும்,
அசர்ந்து போயின அவள் அழகில்.
ஆவின் பாலும், இனிய தேனும்,
கசந்து போனது அவளைக் கண்டு.

விலையற்ற சிலையோ,வானத்தின் நிலவோ !
மண்ணில் நடக்கும் விண்ணுலக அப்சரையோ!
மண் எடுத்து உன்னை உருவாக்கியவனும்,
கண் திறந்து கனவு கண்டானோ !

கண்களோ, இல்லை, கலங்கரை விளக்கோ!
இதயக் கப்பல்கள்  பல ஈர்த்தன அவை.
இந்திய நாட்டின் உலக அழகியோ, இல்லை,
அவள் உலக நாடுகளின் இந்திய அழகியோ !

அவள் அழகை வர்ணிக்கும் நான்
ஒரு கவிஞன் இல்லை; ஆனால்,
அவள் அழகை நான் வர்ணித்ததை
எந்த கவிஞனும் மிஞ்ச வில்லை !!

Kavithai - 11

சிலை


அழகிய சிலை ஒன்று
வடித்தேன் நான்.
தங்கத்தால் அதை முழுதும்
பூசினேன் நான்.

கன்னத்தில் குழி,
மூக்கில் கூர்மை,
பருத்த மார்பங்கள்,
பலமான கால்கள்.

பட்டுக் கூந்தல்,
பவளக் கண்கள், மற்றும்,
முத்துப் பற்கள்,
அதில் பதித்தேன் நான்.

மகிழ்தேன் நானும்,
பார்ப்பவர்கள் சொல்ல,
"பழுதில்லா சிலை,
அற்புதமான படைப்பு" என்று!

நான் வடித்த சிலையில்,
அதிசயம் தான் என்னவென்று
முயற்சியால் நான் ஆராய்ந்ததில்
பலமொன்றை கண்டேன் சிலையில்.

அழுத்தமான பார்வை, அழகிய உடலமைப்பு,
அனால், இவைகளுக்கும் மேலாய்,
இடை மட்டும் அச்சிலையில்
இல்லாதது போல் இருந்ததே !!!

Kavithai - 34


சுமை 


அன்பே !
உன் காதல் 
என் இதயத்திற்கு 
ஒரு சுகமான சுமை.

உன் பிரிவோ,

என் இதயத்திற்கு 
ஒரு தாங்கமுடியா  பாரம் !




உலகம் 


வாழ்க்கை   - நம் இருவரையும் இணைத்து 
அது இனிமையானது என்று தெரிவித்தது.
உலகம்     -  நாம் இருவரையும் பிரித்து 
அது கொடியது என்று நிரூபித்தது.




உப்பு 



உப்பிட்டவனை மறவாதவனின் மனதும்
உப்பின் தூய வெள்ளை நிறமமே.
மறந்தவன் மனதோ,
உப்பில்லா பண்டமே !!



துன்பம் 


துன்பத்தை துன்பம்
என்று நினைத்தால்,
என்றும் துன்பமே; அதை,
வாழ்கையின் அங்கம்
என்று எடுத்துக்கொண்டால்
என்றும் இன்பமே.

துன்பத்தோடு போராடினால்,
மாறும் இன்பமாக அக்கணமே.
இல்லையேல்,
உயிர் பிரிந்தாலும்
உடலை விட்டுப் பிரியாது
எக்கணமும் !!!





Kavithai - 24

அவள் 




கண் எதிரே நின்றாள் அவள்,
கற்பனையில் தவழ்ந்தாள் அவள்.
கனவிலும் வந்து சென்றாள்,
"காதல்" எனச் சொன்னாள் அவள்.

கண்டதும் வரும் காதல்,
என சொன்னவரும் கண்ணில்லாதவரோ?
கண் விழித்தபோது இல்லை அவள்
கானல் நீராய் மறைந்தாள் அவள்.

என் வாழ்வில் வந்த நிலா,
அவள் நில்லாமல் சென்றது ஏனோ?
"கல்லானாலும் கணவன்" என்றவள்,
இன்று கல்லாகிப் போனது ஏனோ ?

காதல் என்பது இவ்வுலகில்,
கையில் காசு உள்ளவரை தானோ?
காலம் முழுதும் வாழும் காதல்,
காவியங்களில் மட்டும் தானோ?

வாழ்க்கையில் உண்டு உயர்வு தாழ்வு,
காதலிலும் உண்டோ தாழ்வு?
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணம்,
இன்று ரொக்கத்தில் முடிவடைகிறதோ ??

Kavithai - 33

தோல்வி



கல்வியில் தோல்வி           -  பேதை ஆனேன்.
காதலில் தோல்வி              -  பித்தன் ஆனேன்.
வீரத்தில் தோல்வி              -  கோழை ஆனேன்.
வாழ்க்கையில் தோல்வி     -  கவிஞன் ஆனேன்.




உலகம் 


கற்பனையுலகம்  -   அது கவிஞர்கள் வாழும் உலகம்.
கனவுலகம்              -     அது காதலர்கள் வாழும் உலகம்.
கலையுலகம்          -    அது கலைஞர்கள் வாழும் உலகம்.
எழையுலகம்           -    அது இந்தியர்கள் வாழும் உலகம்.

Kavithai - 35

இசை




கற்பனை உலகிற்கு அழைத்து செல்லும்
ஒரு அருமையான வாகனம்.

கையோடு கை கோர்ந்துக்கொண்டு
உடன் வரும் ஒரு அன்பு காதலி.

கொதிக்கும் நீரைப்போல் இழைஞர்களை
ஆட வைக்கும் கலைஞன்.

சோர்வடைந்த நெஞ்சங்களுக்கு
ஆறுதல் கூறும் நல்ல தூதன்.

கற்றோர்-கல்லாதோர் இரு வகையினருக்கும்
பாடம் நடத்தும் நல்ல ஆசான்.

மனிதன் இயற்கையை இரசித்து வாழ
போதனை தரும் ஒரு சான்றோன்.

பிறப்பு முதல் இறப்பு வரை இணைபிரியாமல்
வாழ்ந்து வரும் ஒரு உண்மை நண்பன்.

Kavithai - 36

சந்தர்ப்பம்



அழகிய உன்னால் 
கவரப்பட்ட பின்னும்
உனது இதயத்தை
வெல்ல முடியாவிட்டாலும்
எனக்கு உன் மீது
குறை ஒன்றும் இல்லை.

"ஒருதலை காதலன்"
என்ற பட்டத்தை
மக்கள் எனக்கு சூட
சந்தர்ப்பம் அளித்த
உனக்கு நான் எனது
மனமார்ந்த நன்றியை
தெரிவித்துக் கொள்கிறேன் !!!