Friday, 13 March 2015

Kavithai - 83

மனிதன் 




அமைதியின் உருவமாக 
வந்த மனிதன்,
அமைதியே இல்லாத உலகை 
விட்டு செல்கிறான்.
பாவமே அறியாமல் 
வந்த மனிதன்,
பாவங்கள் பல 
செய்தபின் செல்கிறான்.
பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி 
கொண்டு வந்த மனிதன்,
குடும்பத்தை துன்பத்தில் 
ஆழ்த்திவிட்டு செல்கிறான்.
சுதந்திர ஜீவியாக 
வந்த மனிதன்,
கோடி அமரர்களிடம் 
சரணடைய செல்கிறான்.
உலகத்தின் அணிகலனாக 
வந்த மனிதன்,
ஆறடி நிலத்தை அழுக்காக்கி 
விட்டு செல்கிறான்.

No comments:

Post a Comment