மலர்
பூ மலர்வதைப் பார்த்து
பொழுது விடிந்ததோ? இல்லை,
பொழுது விடிவதைப் பார்த்து
பூ மலர்ந்ததோ?
பூ அழைப்பதைப் பார்த்து
வண்டு வந்ததோ? இல்லை,
வண்டு வருவதைப் பார்த்து
பூ உபசரித்ததோ?
பூ மகிழ்வதைப் பார்த்து
வண்டு பாடியதோ? இல்லை,
வண்டு பாடுவதைக் கேட்டு
பூ மகிழ்ந்ததோ?
பூவை முகர்ந்து கூந்தல்
மணம் பெற்றதோ ? இல்லை,
கூந்தலின் மணமால்
பூ மணம் பெற்றதோ ?
பூவின் அழகைக் இரசித்து
மங்கை நாணினாலோ? இல்லை,
மங்கையின் அழகில் மயங்கி
பூ வாடியதோ?
No comments:
Post a Comment