Tuesday, 3 March 2015

Kavithai - 64

ஞானி 



மனிதனின் மனம் 
உடையும்போது இரண்டாக,
குறைவதில்லை 
அவனரிவு பாதியாக.
புரிந்துக்கொள்கிறான் 
அவன் உலகை இரட்டிப்பாக,
அதன்பின் வாழ்கிறான்,
அவன் ஞானியாக !!




நிறைவேறா ஆசைகள் 



கரையைக் காண 
ஓடிவந்ததாம் கடல் அலை.
வானத்தை தொட 
ஆசைப்பட்டதாம் ஒரு மலை.
உயிருடன் உலவ 
துடித்ததாம் சிற்பியின் சிலை.
செல்வரின் மகளை 
காதலிக்க முயன்றான் ஒரு ஏழை.

கரை சேர்ந்ததும் 
மாண்டுப் போனது கடல் அலை.
மலை வளர வளர 
விலகிக்கொண்டது விண் எல்லை.
உலகமே மாறினாலும் 
நடக்குமோ கற்சிலை?
வலையில் மீன் போல் துடித்தபோது,
அறிந்தான் ஏழை தன் பிழை !!



கானல் நீர் 


எட்டிவிடும் தூரத்தில் 
வசந்தம் இருப்பதாக நினைத்து,
உன் மனதை 
தொட்டுவிட முயன்றேன்.
என்னை விட்டு நீ 
விலகியதும் புரிந்தது -
நான் நினைத்தது 
வசந்தமில்லை - வெறும் கானல் நீர் !!

No comments:

Post a Comment