Friday, 6 March 2015

Kavithai - 74

சோலை



காலை முதல் மாலை வரை 
களைப்பின்றி 
காளை போல் ஓடோடி 
உழைக்கும் எனக்கு,
இடையிடையே 
மனதில் வரும் 
உன் நினைவுகள்,
பாலைவனத்தில் சோலையை 
காண்பது போல் உள்ளது !!




அழியாச் சுவடுகள் 


காலம் எமனின் வாகனம்,
மனிதர்கள் அதில் பயணிகள்.
காலம் அழித்துவிடுகிறது 
நாம் கடந்த காலத்தையும்,
நாம் பட்ட கஷ்டங்களையும்.
ஆனால், அழிக்க முடிவதில்லை 
நம் கடந்த காலத்து நினைவுகளையும் 
நாம் விட்டு வந்த வழித்தடங்களையும் !!




மண் 


மண்ணாலே உருவான மனிதன்,
மண்ணுலகிலே வருகிறான் வாழ.
விண்ணழவு பணம் படைத்தாலும்,
மாண்டபின் செல்வதோ மண்ணுக்குள்ளே!!




பூஞ்சோலை 


உன் கூந்தலில் வைத்த 
பூக்கள் ஆனது பூமாலை.
உன் கழுத்தில் கட்டிய 
மாலை ஆனது மணமாலை.
உன் அழகை வர்ணித்த 
வரிகள் ஆனது பாமாலை.
இம்மாலைகள் கொண்ட நீ 
ஒரு அழகிய பூஞ்சோலை !!




சமம் 


காதலே செய்யாத வாலிபன் இதயம் 
நீரே இல்லாத கிணற்றிற்கு சமம்.
ஒரு பெண்ணை காதலிப்பவனின் இதயம் 
நீர் நிறைந்து ஓடும் நதிக்கு சமம்.
பல பெண்களை காதலிப்பவன் இதயம் 
வெள்ளம் உடைத்த குளத்திற்கு சமம்.




No comments:

Post a Comment