இளைஞர் பணி
அறுபத்தேழு ஆண்டுகள் ஆகிற்று
விடுதலை பெற்று நம் நாடு.
ஆனால், இன்னும் மாறவில்லை
ஏழைகள் படும் பாடு.
இங்கு அரசியலே
ஊழல் குடியிருக்கும் வீடு,
இந்நிலையை நம் இளைஞர்
மாற்ற வேண்டும் அடியோடு.
நரகவாசிகள்
இந்திய வீதி ஒன்றில்
நடந்து சென்றேன் ஒரு நாள்.
கண்டவை கண்களால் :
இருபுறமும் குடிசைகள்,
பசியால் வாடும்
பல சிறு குழந்தைகளும்,
இரு கரங்களையும்
ஏந்தியபடி இரவலர்களும்.
இறைவனிடம் கேட்டேன்,
"ஏன் இந்த குறைபாடு?"
பதிலளித்தார் அவர்,
"இதுவே மீறிய ஜனத்தொகை
படுத்தும் பாடு!"
நடந்தேன் தொடர்ந்து
உடைந்த மனதோடு.
கண்டேன் பெரும் செல்வர்
வாழும் அரண்மனைகள்.
கேட்டேன் இறைவனிடம்,
"ஏன் இந்த வேறுபாடு?"
சொன்னார் அவர்,
"இதுவே இந்நாட்டில்
ஊழல் செய்யும் பாகுபாடு!"
ஓவென்று அழுதேன் வேதனையால்.
"எழுபது ஆண்டுகளுக்கு முன்
இவர்கள் இங்கு அடிமைகள்.
இன்று இவர்கள்
சுதந்திர நாட்டின் நரகவாசிகள் !!
அறுபத்தேழு ஆண்டுகள் ஆகிற்று
விடுதலை பெற்று நம் நாடு.
ஆனால், இன்னும் மாறவில்லை
ஏழைகள் படும் பாடு.
இங்கு அரசியலே
ஊழல் குடியிருக்கும் வீடு,
இந்நிலையை நம் இளைஞர்
மாற்ற வேண்டும் அடியோடு.
நரகவாசிகள்
இந்திய வீதி ஒன்றில்
நடந்து சென்றேன் ஒரு நாள்.
கண்டவை கண்களால் :
இருபுறமும் குடிசைகள்,
பசியால் வாடும்
பல சிறு குழந்தைகளும்,
இரு கரங்களையும்
ஏந்தியபடி இரவலர்களும்.
இறைவனிடம் கேட்டேன்,
"ஏன் இந்த குறைபாடு?"
பதிலளித்தார் அவர்,
"இதுவே மீறிய ஜனத்தொகை
படுத்தும் பாடு!"
நடந்தேன் தொடர்ந்து
உடைந்த மனதோடு.
கண்டேன் பெரும் செல்வர்
வாழும் அரண்மனைகள்.
கேட்டேன் இறைவனிடம்,
"ஏன் இந்த வேறுபாடு?"
சொன்னார் அவர்,
"இதுவே இந்நாட்டில்
ஊழல் செய்யும் பாகுபாடு!"
ஓவென்று அழுதேன் வேதனையால்.
"எழுபது ஆண்டுகளுக்கு முன்
இவர்கள் இங்கு அடிமைகள்.
இன்று இவர்கள்
சுதந்திர நாட்டின் நரகவாசிகள் !!
No comments:
Post a Comment