Friday, 20 March 2015

Kavithai - 86

முத்து



ஆழ்கடலினுள் முத்துக்குழிப்பவன்,
முத்து எடுப்பானோ பயந்தால் அவன்,
கடல் பிராணிகளுக்கும் மரணத்திற்கும்?

பெண்ணின் ஆழ்மனதில் இருக்கும்
காதல் முத்தை எடுப்பானோ காதலன் பயந்தால் 
உலகின் எதிர்ப்புக்கும் மிரட்டலுக்கும்? 




கடைக்கண் பார்வை 



பல காட்சிகளை காட்டும் 
கண்களைக் காண,
தேவைப்படுகிறது ஒரு 
பிரதிபலிக்கும் கண்ணாடி.

இதயத்தினுள் இருக்கும் காதலை 
காண தேவைப்படுகிறது 
வசீகரிக்கும் அவளது 
கடைக்கண் பார்வை !!!


No comments:

Post a Comment