மரம்
புதைத்தும் உயிரோடு மரம்.
வாய்க்கரிசி
பட்டினியால் செத்தான்.
விழுந்தது வாய்க்கரிசி !
மூக்குத்தி
மூக்கில் முகாமிடும்
மின்மினிப் பூச்சி !!
புத்தாண்டு
புத்தாண்டு பிறந்தது -
புது காலண்டர்
வாங்க வேண்டுமே என்ற
முதல் கவலையுடன்.
கண்கள்
உப்பு நீரை
உற்பத்தி செய்யும்
மினி தொழிற்சாலை !
புன்னகை
கண்களால் எழுதப்படும்
கவிதைக்கு,
இதழ்களால் கொடுக்கப்படும்
இனிய சன்மானம் !!
காதலனின் புலம்பல்
நீ தந்து சென்றது
உன் திருமண
அழைப்பிதழ் அல்ல -
நம் காதலின்
காகிதக் கல்லறை !!
கடமை
மண்ணில் மாதம் மும்மாரி
பெய்யாவிட்டாலும்,
ஏழைகளின் வயிற்றில்
தினம் மூன்று வேளை
பெய்கிறது அமிலமழை !!
மக்கள் பெருக்கம்
பிரச்சினைகளின் பிரம்மா !!
கவிதை மகால்.
மும்தாஜ்
ஷாஜஹான்
தாஜ்மகால்.
நீ
நான்
என் கவிதை !
அம்மா
துன்பத்தை
தன் பங்கிற்கும்,
இன்பத்தை மகன்
பங்கிற்கும் என
வித்தியாசமாய்
பாகம் பிரிப்பவள் !
நிலா
வான்குமரி
மேகச்சேலையால்
மறைக்க முயலும்
மார்பகமோ !!!
No comments:
Post a Comment