Saturday, 8 February 2014

தனி தமிழ் சொற்கள் - 2

தனி தமிழ் சொற்கள் 



1.   பிராயச்சித்தம்            =       கழுவாய்
2.   பிரியம்                           =       விருப்பம் /விருப்பு
3.   பிராணம்                       =       உயிர்
4.   அசாத்தியம்                 =       கூடாமை
5.   அபராதம்                      =        குற்றம்
6.   அபிவிருத்தி                =       பெருவளர்ச்சி
7.   பகிரங்கம்                     =       வெளிப்படை
8.   உபகாரம்                       =       ஒப்புரவு
9.   இராசி                             =       ஓரை
10.  சித்திரம்                        =       ஓவியம்



11.   உண்ணாவிரதம்       =      தவப்பழி
12.   அபிஷேகம்                 =      திருமுழுக்கு
13.   அனுபவம்                   =       துய்ப்பு
14.   நிச்சயம்                       =       தேற்றம்
15.   சாதம்                            =       சோறு
16.   தூரம்                             =        சேய்மை
17.   தாமதம்                        =        தாழ்ப்பு
18.   திரவியம்                     =        பொருள்
19.   தினம்                            =        நாள்
20.   நவம்                             =        புதுமை



21.   நட்சத்திரம்                  =     நாள்மீன்
22.   நிவாஸ்                        =     குடில் / அகம்
23.   Grill  Gate                          =     இரும்பு படல்கள்
24.   Calling Bell                        =     அழைப்பு மணி
25.   Ground Floor                    =      தரை தள வீதி
26.   Cupboard                         =      மரப்பேழை / இழைப்பேழை
27.   Luggage                            =      சுமை
28.   Diet                                   =      உணவு கட்டுப்பாடு
29.   நாசம்                            =       அழிவு
30.   நாதம்                            =       ஒலி



31.   Choice                              =      உகப்பு
32.   சந்தேகம்                     =       ஐயம்
33.   பத்திரம்                        =      ஆவணம்
34.   சங்கீதம்                       =       இசை
35.   நஷ்டம்                        =       இழப்பு
36.   சிங்காசனம்               =       அரியணை
37.   சவால்                          =       அறைகூவல்
38.   தருமம்                         =       அறம்
39.   வஸ்திரம்                    =       ஆடை
40.   தைலம்                         =      எண்ணை



41.   தோஷம்                      =        குற்றம்
42.   நதி                                  =        ஆறு
43.   நமஸ்காரம்               =         வணக்கம்
44.   கிரகம்                           =         கோள்
45.   திருப்தி                         =         சால்வு
46.   ரசம்                                =         சாறு
47.   கிராமம்                        =         சிற்றூர்
48.   Keyboard                         =         விசப்பலகை
49.   Button                               =         பொத்தான்
50.   சிகிச்சை                      =         பண்டுவம்







Friday, 7 February 2014

தனி தமிழ் சொற்கள் - 1


1.   மெழுகுவர்த்தி            =         மெழுகுத்திரி
2.   பஜார்                              =         கடைத்தெரு
3.   Barrel                                 =         பெரும்பானை
4.   சத்து                                =         ஊட்டம்
5.   சூர்யகாந்தி                   =         கதிர்வணங்கிப்பூ
6.   Cash Receipt                      =         பணப்பற்றுச்சீட்டு
7.   ஞானம்                          =         மெய்யறிவு
8.   Elder Sister                        =          தமக்கை / தவ்வை
9.   அண்ணன்                    =          தமையன்
10.  தயாரிப்பு                      =         உருவாக்கம்


11.  தயார் ஆடைகள்       =         ஆயத்த ஆடைகள்
12.  பிரச்சனை                    =         சிக்கல்
13.  யாகம்                            =          வேள்வி
14.  சுமங்கலி                      =          வாழ்வரசி
15.  மமதை                          =          திமிர்
16.  Bonus                                =          மிகை ஊதியம் / மேல் ஊதியம்
17.  தியாகி                           =          ஈகி
18.  தியாகம்                        =          ஈகம் / ஈகை
19.  Incentive                            =          ஊக்க ஊதியம்
20.  விதவை                       =          கைம்பெண்



21.   Icecream                          =         பனிக்குழைவு / குளிர்களி /பனிப்பால்குழைவு
22.   அதிரசம்                      =         மிகுசுவையம்
23.   Coffee Shop                     =         குழம்பியகம்
24.   Omlette                            =         முட்டை அடை
25.   ரொட்டி                        =          கோதுமை அடை
26.   மகிமை                       =          பேராற்றல்
27.   Form                               =          படிவம்
28.   Biryani                             =          நெய்யூன்அரிசி
29.   பஞ்சம்                         =          வக்கடம்
30.   ஜன்னல்                      =          சாளர் / சாலர்



31.   Sweater                           =          வியர்வி
32.   Mood                              =          செவ்வி
33.   மோட்சம்                    =          வீடு / விடு பெறுதல்
34.   Bakery                            =           அடுமலை
35.   X-Ray                             =           ஊடுருவி
36.   Thesaurus                        =           நிகண்டு
37.   Lexicon                           =           பேரதிகாரி
38.   மையல்                      =           மயக்கம்
39.   பஞ்சம்                        =           கருப்பு
40.   மடி                               =           சோம்பல்



41.   விவாதம்                    =          சொற்ப்போர்
42.   அதிர்ஷ்டம்               =           நல்வாய்ப்பு / ஆகூழ்
43.   துரதிர்ஷ்டம்             =           போகூழ்
44.   தானியம்                    =            கூலம்
45.   வசந்தம்                      =           இளவேனில்
46.   வாழ்க வழமுடன்  =           வாழ்க வழத்துடன்
47.   கீர்த்தி                          =            சீர்த்தி
48.   திருஷ்டி                     =            கண்ணேறு
49.   சாரதி                           =            வலவன்
50.   உள்ளுதல்                 =            நினைத்தல்



51.   Novel                             =             புதினம்
52.   Petrol                              =             எரிநெய் /எரிஎண்ணெய்
53.   மேசை                        =             மீப்பலகை
54.   சபதி                             =             சிற்பகலைஞர் /சிற்பவல்லுனர்
55.   உபயம்                        =             அன்பளிப்பு /கொடை
56.   திருமதி                      =              திருவாட்டி
57.   வேஷ்டி                     =              வேட்டி
58.   Auto                               =              தானி
59.   இதயம்                       =              நெஞ்சாங்குலை
60.   தர்பார்                         =              ஓலக்கம்







Aphorisms - 1

1.  Prayer is not a 'spare wheel' that you pull out when in trouble. But it is a 'steering wheel' that directs the right path throughout.

2.  Because of its tiny wings and heavy body, aerodynamically the bumblebee shouldn't be able to fly. But the bumblebee doesn't know that. So, it flies anyway.

3.  You dont drown by falling in the water; you drown by staying there.

4.  As a child we always wanted to grow up. But now I realise that broken toys and lost pencils were much better than broken hearts and lost friends.

5. Life's a journey; NOT a race.

6.  Too many people spend money they haven't earned, to buy things they don't want, to impress people they don't like.

7.  Creeping snails have the weakest force.

8. Procrastination is the thief of Time.

9.  Sieve speaks that there is a hole in the pot, while itself has hundreds.

10.  EGO :  Edging God Out.

     

வாழ்கையின் புதிர்கள்

வாழ்கையின் புதிர்கள் 



ஒரு நாள் ஒரு முனிவரிடம் நான்கு பேர் வந்து, "உலகத்தில் எது நல்லது, எது கெட்டது என்று எப்படி புரிந்துக் கொள்வது?", என்று கேட்டார்கள். அதற்க்கு முனிவர், "எனக்கு தெரியாது", என்று பதில் அளித்தார். நான்கு பேரும் ஆச்சரியப்பட்டார்கள்.

பின்பு முனிவர், "வாருங்கள், உங்கள் நாலு பேரையும் புஷ்பக விமானத்தில் ஏற்றி செல்கிறேன். விமானத்தில் போகும்போது நான் சில கேள்விகள் கேட்பேன். நீங்கள் சரியான பதில் சொன்னால், தொடர்ந்து பயணம் செய்யலாம். தவறான பதில் சொன்னால், விமானத்திலிருந்து கீழே தள்ளி விடப்படுவீர்கள்", என்றார். நாலு பேரும் சம்மதித்தார்கள்.

புஷ்பக விமானத்தில் சென்றுக் கொண்டிருந்த 4 பேரும் கண்ட காட்சி இதோ :

ஒரு புலி சில குட்டிகள் ஈன்றதும், பசியால் இறை தேடிக்கொண்டு ஒரு இடத்திற்கு வந்தது. அதே இடத்தில் ஒரு மானும் குட்டிகள் ஈன்ற பின், இறை தேடி வந்தது. அந்த மானைக் கண்டவுடன் அந்த புலி அதைக் கொன்றுவிட்டு தின்றது. பின்பு புலி தன் குட்டிகளுக்கு பால் கொடுத்தது. குட்டிகள் மகிழ்ச்சி அடைந்தன. மானின் குட்டிகளுக்கோ துக்கமும் பட்டினியும்.

"இந்த புலி செய்தது சரியா, தவறா ?", என்று முனிவர் அந்த 4 பேர்களிடம் கேட்டார்.

முதல் மனிதர் சொன்னார், "இது அநியாயம். அந்த புலியும் குட்டிகளும் பசியை போக்கிக் கொண்டன. அந்த மான் மட்டும் என்ன பாவம் செய்தது? குட்டிகள் என்ன பாவம் செய்தன? இது தவறு", என்றார். உடனே, அந்த விமானத்திலிருந்து அவர் கீழே தள்ளப்பட்டார்.

இரண்டாம் மனிதர் சொன்னார், "புலி செய்தது சரிதான். அதன் பசிக்கு அது இறை தேடிக்கொண்டது. அதில் என்ன தவறு", என்றார். உடனே, அந்த விமானத்திலிருந்து அவரும் கீழே தள்ளிவிடப்பட்டார்.

மூன்றாம் மனிதர் சொன்னார், "புலி மானைக் கொன்றது இயற்க்கை.மான் அந்த புலிக்கு இறையானதும் இயற்க்கை. அதை நாம் தவறு என்றும், சரி என்றும் சொல்ல முடியாது." உடனே அவரும் விமானத்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டார்.

நாலாம் மனிதர், "எனக்கு தெரியாது", என்று பதில் சொன்னார். அவர் புஷ்பகவிமானதிலிருந்து கீழே தள்ளப்படவில்லை.

உலகத்தில் பல விஷயங்களுக்கு நாம் பதில் சொல்ல முடிவதில்லை. அது சரியா, தவறா என்றும் நமக்கு புரிவதில்லை.





Saturday, 1 February 2014

தச்சன்

தச்சன் 


ஒரு தச்சன் ஒரு தெருவின் ஓரத்தில் ஒரு சிறு கடையில் காலணிகளை தைத்துக்கொண்டிருந்தன். எல்லோருக்கும் அவன் செய்யும் வேலையில் மிகவும் திருப்தி. அவன் செருப்பு தைப்பது மட்டும் அல்லாமல், அவன் பாடிக்கொண்டே தன் வேலையை செய்வது தான் அவனது சிறப்பு. யார் அவன் கடைக்கு வந்தாலும் அவன் சந்தோஷத்துடன் பாடிக்கொண்டே, வாடிக்கையாளர்களின் காலணிகளை சரிசெய்து கொடுப்பான்.

ஒரு நாள் ஒரு செல்வந்தர் அவனுக்கு அன்பளிப்பாக ரூ 50,000/- கொடுத்தார். அவன் அந்த கடையிலேயே தங்குவதால், அந்த பணத்தை கடையிலேயே வைத்திருந்தான்.ஆனால், ஏதாவது ஒரு வாடிக்கையாளர் தன் பணத்தை எடுதுவிடுவார்களோ என்ற பயம் வந்துவிட்டது.சந்தேகமும் பயமும் அதிகம் ஆக ஆக, அவன் பாடுவதை நிறுத்தி விட்டான்.அவனது நிம்மதியும் பறிபோய்விட்டது. இராத்திரியில் அவனுடைய தூக்கமும் பாதிக்கப்பட்டது.

சிறு நாட்கள் கழித்து, அந்த செல்வந்தர் தச்சனின் கடைக்கு மீண்டும் வந்தார். அவன் பாட்டு பாடாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தச்சன் செல்வந்தரிடம் உண்மையை சொன்னான்."உங்கள் பணம் தான் எனது எல்லாதொல்லைக்கு காரணம். அதை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்" என்று சொல்லி அந்த 50,000/- ரூபாயை திருப்பி கொடுத்துவிட்டான் !

Kabir's Couplets - 14

Kabir's Couplets - 14

 


चिउंटी चावल ले चली, बिच में मिल गई दाल । 
कहैं कबीर दो ना मिलैं, इकले दूजी डाल ॥ 



எறும்பு அரிசி ஒன்றை எடுத்து சென்றபோது
பருப்பு ஒன்றை வழியில் கண்டது !
இரண்டும் கிடைப்பதில்லை, ஒன்றை மட்டும்
விரும்பு என்று சொல்கிறார் கபீர் !!

Kabir's Couplets -13

Kabir's Couplets - 13



पंख होत परबस पर्यो, सूआ के बुधि नांहि । 
अकिल बिहूना आदमी, यों बन्धा जग माहिं ॥ 



அறிவின்மை காரணத்தால் கிளி
சிறகுகள் இருந்தும் கூண்டில் அடைக்கப்படுகிறது !
அவ்வாறே, மனிதனும் மோகத்தால்
சிறைகளில் அடைக்கப்படுகிறான்  !!


Kabir's Couplets - 12

Kabir's Couplets - 12



तिनका कबहु न निंदिये, जो पाँव तले होये । 
कबहु उड़ आँखों पड़े, पीर घनेरी होय । 




காலடியில் கிடக்கும் தூசியை
ஏளனம் என்றும் செய்யாதீர்கள் !
தூசி உங்கள் கண்ணில் விழுந்தால்
அவதியை நீங்கள் அறிவீர்கள் !

பொறுமை

பொறுமை 

 

ஒருநாள் ஒரு முனிவரிடம் ஒரு பெண் வந்தாள். 'என் கணவர் என்னை எப்பொழுதும் திட்டுகிறார். நானும் திரும்ப அவரை திட்டுவேன். அதனால் சண்டை அதிகமாகிறது. பின்பு என் கணவர் அடிக்கவும் செய்வார். இது அடிக்கடி நடக்கிறது. எனது பிரட்சனை தீர ஏதாவது வழி சொல்லுங்கள், முனிவர் அவர்களே', என்று சொன்னாள்.

முனிவர் சொன்னார், "அம்மணி, உன் கனவருடானன சண்டை வராமல் இருக்க ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. நீ காட்டுக்குள் சென்று, ஒரு புலியின் வாலிலிருந்து ஒரு முடியை கொண்டு வர வேண்டும்". இதைக்கேட்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்தாள்.

"முனிவரே ! நான் நலமாக வாழ வழி கேட்டால், நீங்கள் நான் சாவதற்கான வழி சொல்கிறீர்களே!", என்றாள் . முனிவர் திட்டவட்டமாக சொன்னார், இதைத்தவிர வேறு வழி கிடையாது என்று. அந்த பெண் வேறு வழியில்லாமல் சம்மதித்தாள்.

மறு நாள் அவள் காட்டுக்குள் சென்றாள் . ஒரு கிலோ ஆட்டுக்கறி கொண்டு சென்றாள் . ஒரு புலியை கண்டதும், கறியை வைத்துவிட்டு ஓடிவிட்டாள் . புலி அவளை கண்டு ஓடி வந்தது. ஆனால், கறியை பார்த்ததும், அதை உண்ண ஆரம்பித்தது.அவளை மறந்துவிட்டது.

மறு நாள் மீண்டும், அந்த பெண் கறி கொண்டு காட்டுக்குள் சென்றாள் . அதே புலியை மீண்டும் கண்டாள் . கறியை வைத்தாள். புலி கறி திண்றது. அவளை ஒன்றும் செய்யவில்லை. சில நாட்கள் இப்படியே நடந்தது. இப்பொழுது, புலி அவளுக்கு நெருக்கமாகிவிட்டது. அப்பொழுது, அவள் அருகில் சென்று ஒரு முடியை பிடுங்கிவிட்டாள் .

முனிவரிடம் புலியின் முடியை காட்டினாள். அப்பொழுது முனிவர் சொன்னார், "பார்த்தாயா? பொறுமையால் ஒரு புலியையே நீ அடக்கிவிட்டாய். பொறுமையால் ஏன் நீ உன் கணவரை அடக்கமுடியாது? அவர் திட்டினால் நீ பொறுமையாக இரு. அவர் கோபம் தணிந்துவிடும்", என்றார். பெண்  புரிந்துக்கொண்டாள் .