பெற்றவை
கல்வியும் செல்வமும் பெற்றேன்
அறிவைக் கொண்டு.
பகையையும் தீமையையும் வென்றேன்
அஞ்சா நெஞ்சம் கொண்டு.
பாசத்தையும் நட்பையும் பெற்றேன்
என் அன்பை கொடுத்து.
கற்பனையும் கவிதையும்
பெற்றேன் அவளிடம் இதயம் கொடுத்து !
ஈருடல் ஓருயிர்
நான்கு கண்கள் வேண்டும்
என்றேன் இறைவனிடம்.
இரண்டில் நீ மட்டுமே
காட்சி அளிப்பதால் !
இரண்டு இதயம் வேண்டும்
என்றேன் இறைவனிடம்.
ஒன்றை உன்னிடம்
கொடுத்து விட்டதால் !
வானத்தில் எதற்கு நிலா
என்றேன் இறைவனிடம்.
நிலாவே உன் வடிவில்
பூமியில் வந்துள்ளதால் !
இருவருக்கும் போதும்
ஓருயிர் என்றேன் இறைவனிடம்.
நாமிருவரும் ஒன்றாய்
இணைந்து வாழ்வதால் !
கல்வியும் செல்வமும் பெற்றேன்
அறிவைக் கொண்டு.
பகையையும் தீமையையும் வென்றேன்
அஞ்சா நெஞ்சம் கொண்டு.
பாசத்தையும் நட்பையும் பெற்றேன்
என் அன்பை கொடுத்து.
கற்பனையும் கவிதையும்
பெற்றேன் அவளிடம் இதயம் கொடுத்து !
ஈருடல் ஓருயிர்
நான்கு கண்கள் வேண்டும்
என்றேன் இறைவனிடம்.
இரண்டில் நீ மட்டுமே
காட்சி அளிப்பதால் !
இரண்டு இதயம் வேண்டும்
என்றேன் இறைவனிடம்.
ஒன்றை உன்னிடம்
கொடுத்து விட்டதால் !
வானத்தில் எதற்கு நிலா
என்றேன் இறைவனிடம்.
நிலாவே உன் வடிவில்
பூமியில் வந்துள்ளதால் !
இருவருக்கும் போதும்
ஓருயிர் என்றேன் இறைவனிடம்.
நாமிருவரும் ஒன்றாய்
இணைந்து வாழ்வதால் !
No comments:
Post a Comment