Friday, 6 March 2015

Kavithai - 68

பெற்றவை 



கல்வியும் செல்வமும் பெற்றேன் 
அறிவைக் கொண்டு.
பகையையும் தீமையையும் வென்றேன் 
அஞ்சா நெஞ்சம் கொண்டு.

பாசத்தையும் நட்பையும் பெற்றேன் 
என் அன்பை கொடுத்து.
கற்பனையும் கவிதையும் 
பெற்றேன் அவளிடம் இதயம் கொடுத்து !




ஈருடல் ஓருயிர் 



நான்கு கண்கள் வேண்டும் 
என்றேன் இறைவனிடம்.
இரண்டில் நீ மட்டுமே 
காட்சி அளிப்பதால் !

இரண்டு இதயம் வேண்டும் 
என்றேன் இறைவனிடம்.
ஒன்றை உன்னிடம் 
கொடுத்து விட்டதால் !

வானத்தில் எதற்கு நிலா 
என்றேன் இறைவனிடம்.
நிலாவே உன் வடிவில் 
பூமியில் வந்துள்ளதால் !

இருவருக்கும் போதும் 
ஓருயிர் என்றேன் இறைவனிடம்.
நாமிருவரும் ஒன்றாய் 
இணைந்து வாழ்வதால் !




No comments:

Post a Comment