Sunday, 1 March 2015

Kavithai - 56

வெற்றி வாழ்க்கை 



சுவை இல்லாத வாழ்வை 
இனிமை ஆக்கியவள்.
கற்பனை இல்லாத வாழ்வை 
கவிதை ஆக்கியவள்.

தோல்வியுற்ற வாழ்வை 
வெற்றி பெற செய்தவள்.
சோதனை மிகுந்த வாழ்வை 
போராட வைத்தவள்.

வாசமில்லா வாழ்வை 
பூந்தோட்டமாக மாற்றியவள்.
வீணாகிக்கொண்டிருந்த வாழ்வை 
உபயோகிக்க கற்று தந்தவள்.

இருள் வானமாய் இருந்த வாழ்வில் 
நிலா ஒழியாய் வந்தவள்.
தனிமையால் வாடிய வாழ்வில் 
துணைவியாக வந்தவள் !!!

No comments:

Post a Comment