Friday, 20 March 2015

Kavithai - 88

பக்தி 



மண்ணால் மனிதனை உருவாக்கி,
அதனுள், இரக்கமே இல்லாத 
கல்நெஞ்சை வைத்தான் இறைவன்.

மண்ணால் இறைவனை வடிவமைத்து,
அவனை அமைதியே இல்லாத 
கடலினுள் கலக்கினான் மனிதன்.


 


பஞ்சம் 



இங்கு ஜனத்தொகை பெருகுவதால்
பல இலட்சங்களாய்,
குறைகிறது மனிதர்களின்
வாழ்க்கை இலட்சியங்கள்.

வாழும்போது வரும் துன்பங்கள்
பல இலட்சங்கள்.
மரித்த பிறகும் கிடைப்பது அரிது
நிலம் ஆறடி, இடுகாட்டில்  !!!!

No comments:

Post a Comment