Sunday, 1 March 2015

Kavithai - 58

உலகம் 




உன்னைக் கண்டதும்,
கண்கள் மயங்கியது.
கண்கள் மயங்கியதும்,
காதல் அரும்பியது.
காதல் அரும்பியதும்,
இதயம் நிரம்பியது.
இதயம் நிரம்பியதும்,
கற்பனை வளர்ந்தது.
கற்பனை வளர்ந்ததும்,
கவிதை எழுதினேன்.
கவிதை எழுதியதும்,
காதலை உலகம் அறிந்தது.
உலகம் அறிந்ததும்,
நம்மை ஏற்றுக்கொண்டது.
உலகம் ஏற்றுக்கொண்டதும்,
நாம் மணந்துக் கொண்டோம் !!!

No comments:

Post a Comment