Sunday, 1 March 2015

Kavithai - 59

வெற்றி வாழ்க்கை 




நடக்க தெரியாமல் 
வந்த மனிதன்,
பிறர் நடக்க தடம்
அமைத்துக்கொண்டு செல்கிறான்.

சிரிக்க தெரியாமல் 
வந்த மனிதன்,
பலர் இன்பமாய் வாழ 
வழி அமைத்துக்கொண்டு செல்கிறான்.

கல்வி இல்லாமல் 
வந்த மனிதன்,
பலர் ஞானிகளாய் வாழ 
கற்பித்துவிட்டு செல்கிறான்.

உலகம்  அறியாமல் 
வந்த மனிதன்,
புதிய உலகை மண்ணில் 
உருவாக்கிவிட்டு செல்கிறான்.

அன்பு செலுத்த தெரியாமல் 
வந்த மனிதன்.
பலர் இதயங்களை வென்றபின் 
உலகை விட்டு செல்கிறான்.


No comments:

Post a Comment