Friday, 6 March 2015

Kavithai - 71

வறுமை 




தன் பெற்றோரையும், தன் சுகத்தையும்,
வாழ்ந்த தன் அரண்மனையையும் மறந்து,
ஊர்வாய் உளறலை துச்சமாக நினைத்து,
தன் இதயத்தை எனக்கு பரிசாக கொடுக்க,
முன்வந்த இனிய அரண்மனைப் புறாவே!
நீ என்னை மறந்து விடு.!
செழிப்பில் தவழ்ந்த அரண்மனைப் புறாவுக்கு,
எனது புறாக்கூண்டில் இடம் குறை படும்.
உனது தூய வெள்ளை இதயத்தை அணைக்க,
எனது கந்தல் ஆடைகள் தடையாக உள்ளது.
வாவென்று விரும்பி அழைத்தாலும் மனதுக்குள்,
வாய் எனது கூச்சப்படுகிறது உன்னை அழைக்க.
பசுமையை உன் வாழ்விலிருந்து பிரித்து,
சுமையை கொடுக்க மறுக்கிறது என் இதயம்.
காதலுக்கு தூது விட்ட என் இனிய புறாவே !
நீ என்னை மறந்து விடு !

No comments:

Post a Comment