Friday, 6 March 2015

Kavithai - 72

பொறுமை 




மேகம் கண்டு, மழையைக் கண்டு 
நிதமும் ஆட ஆனந்தத்தால்
மயிலுக்கு கொடுத்து வைக்கவில்லை.
உன்னைக்கண்டு, உன் குரலைக் கேட்டு,
நிதமும் வாழ மகிழ்ச்சியோடு,
எனக்கு கொடுத்து வைக்கவில்லை !

முகில் கருக்கும், மழை பொழியும்
என்று பொறுமையுடன் மயில் 
அமைதிக் கொள்கிறதே - அது எப்படி?
காலம் கனியும், நாமும் சந்திப்போம் 
என்று நினைத்தே நாட்களை போக்க,
முடிவதில்லையே ஏன் ? சொல் என் அன்பே !!




மனக்கண் பார்வை 


நான் வாழும் உலகம் 
நிறைந்துள்ளது மனிதர்களால்.
என் பாரத நாடு 
நிறைந்துள்ளது சகோதரர்களால்.
நான் பிறந்த ஊர் 
நிறைந்துள்ளது அன்பர்களால்.
நான் வசிக்கும் வீடு 
நிறைந்துள்ளது உறவினர்களால்.
என்றும் என் இதயம் 
நிறைந்துள்ளது நண்பர்களால் !!!

No comments:

Post a Comment