Saturday, 7 March 2015

Kavithai - 77

இருள் 



நிலாவே !
நீ சூரியனிடமிருந்து
ஒளியைப் பெற்று
எங்களுக்கு தந்தாலும்
பயன் என்ன?
எங்கள் வாழ்க்கை
இன்னும் மூழ்கியுள்ளது,
இருளில் தானே !!



காண்கிறேன் 



அவள் பாசத்தில் நான்
என் அன்பைக் காண்கிறேன்;
வளையல்களின் சத்தத்தில்
என் மகிழ்ச்சியைக் காண்கிறேன்.
அவள் பெருமையிலே
என் நேர்மையைக் காண்கிறேன்.
அவள் தாலியிலே
என் கடமையைக் காண்கிறேன்.
அவள் சிரிப்பிலே
என் வெற்றியைக் காண்கிறேன்.
அவளது பொறுமையிலே
என் வாழ்க்கையைக் காண்கிறேன்.



செயல்கள் 


பூமியை தங்கமாக்க
பிடித்தேன் கலப்பை.
இதயத்தை இலேசாக்க
செய்தேன் தியானம்.
சிந்தனையை தூய்மையாக்க
செய்தேன் பிரார்தனை.
வாழ்க்கையை முழுமையாக்க
கைபிடித்தேன் உன்னை  !!!


No comments:

Post a Comment