Sunday, 15 March 2015

Kavithai - 79

அமரக் காதல் 



ஆசை என்னும் எண்ணத்தாலே,
இதயம் என்னும் புத்தகத்திலே,
காதல் என்னும் எழுதுகோலாலே,
காவியம் எழுதுகிறோம் நாம்.
நாமோ, இணைந்தால் வாழ்வோம்;
பிரிந்தால் மறிப்போம்.
ஆனால், நம் காதல் காவியமோ,
என்றேண்டும் நிலைத்திருக்கும் 
காதல் கொண்ட இளம் இதயங்களிலே!



எங்கள் காதல் 


எங்கள் காதலை எதிர்த்தே 
சோர்ந்து விடும் உலகம்; ஆனால்,
ஒரு நாளும் அயராது.
எங்கள் இளமை மாறா காதல்.

போராடியே உலகுடன் நிதமும்,
மரித்தாலும் ஒரு தினம்,
மறையாது ஒரு நாளும்,
அமுதுண்ட எங்கள் அமரக் காதல் !

No comments:

Post a Comment