காதல் சிட்டுக்கள்
இருவரும் உயிருக்குயிராய்
நேசிப்பவர்கள்.
தங்கள் இதயத்தை
பரிமாரிக்கொண்டவர்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.
இயற்கையை இரசித்து
வாழ்பவர்கள்.
கிளிகளைப்போல் பேசுபவர்கள்.
குயிலைப்போல் பாடுபவர்கள்.
குருவிகளைப்போல் சிறகடித்து
பறப்பவர்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.
அமைதியின் சின்னமான புறாவைப்
போன்றவர்கள்.
புறாவைப்போல் கொஞ்சுவார்கள்.
மயில்போல் சந்தோஷமாக
ஆடுபவர்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.
நாய்களைப்போல் நன்றி
உள்ளவர்கள். ஆனால்,
ஓநாயின் தந்திரம் அறியாதவர்கள்.
சிங்கம் போன்றவர்கள், ஆனால்,
தீங்கு பிறருக்கு
விளைவிக்காதவர்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.
அவர்களின் வாழ்வில் சூரியனின்
ஒளி வீசுகிறது.
இவ்வுலகில் வெள்ளியைப்போல்
மின்னுபவர்கள்.
நிலாவைப்போல் ஒளி வீசுபவர்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.
கற்பனை செய்வதில் கவிஞர்கள்.
சிந்தனையில் சிறகடித்து பறப்பவர்கள்.
நிலாவைக் கொண்டு இருவரும்
விளையாடுபவர்கள்.
கற்பனைக் கடலில் நடந்து
செல்பவர்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.
சகுனியின் சூழ்ச்சி அறியாதவர்கள்.
திருஷ்ராஷ்டிரனின் பேராசை
இல்லாதவர்கள்.
தருமனைப் போல் வாழ்வில்
சூதாட்டம் ஆடாதவர்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.
காலங்களில் வசந்தம்.
மாதங்களில் மார்கழி.
பழங்களில் முக்கனி.
நதிகளில் கங்கை.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.
தங்களை வெட்ட வரும்
வேட்டுவனுக்கும் நிழல்தரும்
மரம் போன்றவர்கள்.
தங்களை கசக்கும் விரல்களுக்கும்
மணம் தரும் பூவைப்
போன்றவர்கள்.
உலகம் அவர்களை வெறுத்தாலும்
உலகை வேறுக்காதவர்கள் .
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.
மனித ஒழுக்கத்தின்
முழு உருவங்கள்.
இயற்கைக்கு அழகு ஊட்டும்
அணிகலன்கள்.
மனித உருவ பவளங்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.
அவர்களின் காதல் பாலினும்
வெண்மையானது.
காதலை தெய்வமாக மதிப்பவர்கள்.
இவ்வுலகின் இன்றியமையா
பொக்கிஷங்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.
இருவரும் உயிருக்குயிராய்
நேசிப்பவர்கள்.
தங்கள் இதயத்தை
பரிமாரிக்கொண்டவர்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.
இயற்கையை இரசித்து
வாழ்பவர்கள்.
கிளிகளைப்போல் பேசுபவர்கள்.
குயிலைப்போல் பாடுபவர்கள்.
குருவிகளைப்போல் சிறகடித்து
பறப்பவர்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.
அமைதியின் சின்னமான புறாவைப்
போன்றவர்கள்.
புறாவைப்போல் கொஞ்சுவார்கள்.
மயில்போல் சந்தோஷமாக
ஆடுபவர்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.
நாய்களைப்போல் நன்றி
உள்ளவர்கள். ஆனால்,
ஓநாயின் தந்திரம் அறியாதவர்கள்.
சிங்கம் போன்றவர்கள், ஆனால்,
தீங்கு பிறருக்கு
விளைவிக்காதவர்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.
அவர்களின் வாழ்வில் சூரியனின்
ஒளி வீசுகிறது.
இவ்வுலகில் வெள்ளியைப்போல்
மின்னுபவர்கள்.
நிலாவைப்போல் ஒளி வீசுபவர்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.
கற்பனை செய்வதில் கவிஞர்கள்.
சிந்தனையில் சிறகடித்து பறப்பவர்கள்.
நிலாவைக் கொண்டு இருவரும்
விளையாடுபவர்கள்.
கற்பனைக் கடலில் நடந்து
செல்பவர்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.
சகுனியின் சூழ்ச்சி அறியாதவர்கள்.
திருஷ்ராஷ்டிரனின் பேராசை
இல்லாதவர்கள்.
தருமனைப் போல் வாழ்வில்
சூதாட்டம் ஆடாதவர்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.
காலங்களில் வசந்தம்.
மாதங்களில் மார்கழி.
பழங்களில் முக்கனி.
நதிகளில் கங்கை.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.
தங்களை வெட்ட வரும்
வேட்டுவனுக்கும் நிழல்தரும்
மரம் போன்றவர்கள்.
தங்களை கசக்கும் விரல்களுக்கும்
மணம் தரும் பூவைப்
போன்றவர்கள்.
உலகம் அவர்களை வெறுத்தாலும்
உலகை வேறுக்காதவர்கள் .
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.
மனித ஒழுக்கத்தின்
முழு உருவங்கள்.
இயற்கைக்கு அழகு ஊட்டும்
அணிகலன்கள்.
மனித உருவ பவளங்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.
அவர்களின் காதல் பாலினும்
வெண்மையானது.
காதலை தெய்வமாக மதிப்பவர்கள்.
இவ்வுலகின் இன்றியமையா
பொக்கிஷங்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.
No comments:
Post a Comment