Saturday, 7 March 2015

Kavithai - 75

இயற்கை 



காலை ஆனவுடன் கூவ,
சேவலுக்கு கற்றுகொடுத்தது யார்?
மாலை ஆனவுடன் ஒளிவீச 
நிலாவுக்கு கற்று கொடுத்தது யார்?
அன்றீனிய பசுவை 'அம்மா' என்றழைக்க 
கன்றுக்கு கற்று கொடுத்தது யார்?
உன்னை கண்டவுடன் காதல் கொள்ள,
என் இதயத்திற்கு கற்று தந்தது யார்?




புராணம் 


'அரசின் சேனையைவிட
உன் அழகு ஆபத்தானது'
என்றான் மாவீரன் சீசர்
கிளியோபாட்ராவைப் பார்த்து.
முற்றும் துறந்த
விசுவாமித்ரரே மயங்கினார்,
மேனகாவின் விசிகரிக்கும்
ஆட்டத்தைப் பார்த்து.
உலகில் மனித அவதாரம்
எடுத்த இராமனரே
மயங்கினார் சீதையின்
இனிய குரலைக் கேட்டு.
மாபெரும் காவியம் ஒன்றை
படைத்திருப்பானே  காளிதாசன்
கயல் போல் அழகிய
உன் கண்களைப் பார்த்து !!


No comments:

Post a Comment