Friday, 6 March 2015

Kavithai - 67

ஏன் ?


அவளது கண்களால் 
நான் மயங்கினேன்.
அவள் என்னை 
பார்க்காதது ஏனோ?

அவளைப் பார்த்து 
நான் புன்னகைத்தேன்.
அவள் என்னை 
கோமாளி என்றது ஏனோ?

அவளுக்கு நான் ரோஜா மலர் 
ஒன்றைக் கொடுத்தேன்.
அதை அவள் 
வாங்காதது ஏனோ?

அவளுக்கு கடிதம் 
ஒன்று எழுதினேன்.
அவள் கடிடத்திற்கு 
பதில் எழுதாதது ஏனோ?

அவளிடம் காதல் சொல்ல 
நான் பாடினேன்.
அவள் என்னை 
தேவதாஸ் என்றது ஏனோ?

அவளின் நினைவால் 
என் மனநிலை சற்று இழந்தேன்.
அவள் என்னை 
பித்தன் என்றது ஏனோ?

அவளின் ஏவலினால் நான் 
சிறைவாசி ஆனேன் 
அவள் என்னை இவ்வளவு 
வெறுப்பது ஏனோ?

அவளிடம் நான் என் 
செல்வத்தைக் காட்டினேன்.
"என்னுயிர்த் தோழா",
என்றழைத்தது ஏனோ? ஏனோ?

No comments:

Post a Comment