கூண்டு
வானத்தில் பறந்த போது
கிளி பாடியது.
தன் மனதின் மகிழ்ச்சியை
உலகிற்கு தெரிவித்தது.
கூண்டில் அடைக்கப்பட்ட பிறகு
கிளி பேசியது. ஆனால்,
மனிதன் கற்றுக் கொடுத்த
சில வார்த்தைகள் மட்டும்.
இயற்கையின் அழகை இரசித்து
நான் பாடினேன்.
என் இதயத்தின் மகிழ்ச்சியை
உலகிற்கு தெரிவித்தேன்.
காதல் வலையில் சிக்கியபின்னும்
நான் பாடுகிறேன். ஆனால்,
இதயம் கற்றுத் தந்த
நம் காதலை மட்டுமே !!!
வானத்தில் பறந்த போது
கிளி பாடியது.
தன் மனதின் மகிழ்ச்சியை
உலகிற்கு தெரிவித்தது.
கூண்டில் அடைக்கப்பட்ட பிறகு
கிளி பேசியது. ஆனால்,
மனிதன் கற்றுக் கொடுத்த
சில வார்த்தைகள் மட்டும்.
இயற்கையின் அழகை இரசித்து
நான் பாடினேன்.
என் இதயத்தின் மகிழ்ச்சியை
உலகிற்கு தெரிவித்தேன்.
காதல் வலையில் சிக்கியபின்னும்
நான் பாடுகிறேன். ஆனால்,
இதயம் கற்றுத் தந்த
நம் காதலை மட்டுமே !!!
No comments:
Post a Comment