Friday, 6 March 2015

Kavithai - 66

ஏற்றம் இறக்கம் 



வாழ்வில் ஏற்றம் உண்டானால் 
உண்டு அதில் இறக்கமும்.
இறக்கத்தால் கூடுகிறதே 
அவ்வாழ்வின் பொலிவு.

பறக்கும் பறவை இறங்காவிட்டால் 
ஏது அதற்க்கு இரை?
இறைவன் கொடுத்த நல்வாழ்வில்,
இறக்கம் இல்லை ஒரு குறை.




வெற்றி 



வாழ்க்கையில் வருகிறது
சோதனை மேல் சோதனை
என்று மனமுடைந்து 
அடையாதீர்கள் வேதனை.

சோதனைகள் தருகின்றன 
வாழக்கையில் போதனைகள்,
என்று அறிந்துக்கொண்டால் 
படைக்கலாம் பல சாதனைகள் !




அனுபவம் 


துன்பம் அனுபவித்ததை மறந்தால்தான் 
சீராய் செயல்புரியலாம் நிகழ்காலத்தில்.
இன்பம் அனுபவிக்காததை நினைத்தால்தான் 
உழைத்து உயரலாம் வாழும் காலத்தில்.








No comments:

Post a Comment