Friday, 24 October 2014

Kavithai - 31 (படித்ததில் பிடித்தது)

1) பிரவசம் 


எதிர்பார்ப்புகள் 
பிறக்கும் வேளை !!


2) மச்சம் 


அவளது பௌர்ணமி முகத்தில்
ஒரு மினி அம்மாவசை !!!


3) தொடர்கதை 


மகள் வாழ்க்கைப்பட்டாள்..
தந்தை கடன்பட்டார் !!!



4) மகாபாரதம் 


பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் சண்டை...
ஜெயித்ததோ திரௌபதி  !!!


5)  கலவரம் 

ஜாதி கலவரத்தின் பின் மக்கள் பிரிந்தனர் ..
அவர்கள் சிந்திய இரத்தமோ கலந்தது !!!


6) கவலை 


உடலை அழிக்கும் புழு  !!



7) கண்கள் 


சதை கொத்திப் பறவைகள் !!



8) எதிர்ப்பு 


உன்னை எல்லோருக்கும் பிடித்திருக்கிறது.
என்னை எல்லோருக்கும் பிடித்திருக்கிறது .
நம்மை தான் யாருக்கும் பிடிக்கவில்லை !!!


9)  காதல் திருமணம் 

மலைபோல் எழுந்த எதிர்ப்புகள்
பனிபோல் மறையும் நேரம் !!



10)  திருமணம் 


பொறுப்புகளை அழைக்க
நடத்தப்படும் சடங்கு !!!


11) அழைப்பிதள் 


அன்பே !!

நீ எனக்கு தந்துச் சென்றது
உன் திருமண அழைப்பிதள் அல்ல !

நம் காதலின் காகிதக்  கல்லறை !!





No comments:

Post a Comment