Sunday, 19 October 2014

Kavithai - 20

வேண்டுதல் 



காற்றோடு வரும் நறுமணமே !
என் காதலியின் வருகையை அறிவிப்பாயோ!

நதியோடு நீந்திவரும் மீனே !
என் காதலியின் இடையை கிள்ளுவாயோ !

வானமதில் ஒளிரும் வெண்ணிலாவே !
என் காதலியின் முகத்தை பிரிதலிப்பாயோ !

காலையில் பாடும் கருங்குயிலே !
என்னவளை வருணித்து பாடுவாயோ !

வண்ணப்பூக்கள் கொண்ட செடிகளே !
என்னவள் மேல் பூமழை பொழிவாயோ !

காலையில் தோன்றும் சிகப்பு சூரியனே !
காதலியின் நெற்றியில் பொட்டு வைப்பாயோ !

இமயத்தில் உருகும் பனிக்கட்டிகளே !
என் காதலியின் மனதை உருக வைப்பாயோ !

மண்ணோடு ஒன்றாய் சேரும் மழையே !
எங்களையும் ஒன்றாய் சேர்த்து வைப்பாயோ !!

No comments:

Post a Comment