Saturday, 28 February 2015

Kavithai - 52

கலைஞன் 



அழகிய சிலைகளையும்,
ஓவியங்களையும் 
கண்டு இரசிக்கும் மனிதன்,
புகழ்கிறான் அவைகளை 
படைத்த கலைஞரின் 
கலை உணர்வையும்,
கை கலையையும்.
ஆனால்,
அழகிய மலைகளையும்,
எழில்மிக்க இயற்கையையும்,
கண்டு இரசிக்கும் மனிதன்,
அவைகளை உருவாக்கிய 
கலைஞரின் கலை மகிமையையும்,
கை கலையையும்,
புகழ்ந்து பாட மறப்பது ஏனோ ?

No comments:

Post a Comment