Friday, 27 February 2015

Kavithai - 45

சினிமா அல்ல, நிஜம் !




ஒருவரை ஒருவர்
பார்த்துக்கொண்டே இருக்க,
நமது வாழ்க்கையில்
நேரம் அதிகம் இல்லை.

நாம் இருவரும் சேர்ந்து
டூயட் பாட
நமக்கு பாடலாசிரியர்கள்
யாரும் இல்லை.

நாம் இருவரும் நடுத்தெருவில்
கைகோர்ந்து ஆட,
நமது கூச்சம்
அனுமதிப்பது இல்லை.

நமது காதலை முறியடிக்க
முயற்சிக்க.
நமக்கு மத்தியில்
வில்லன்கள் இல்லை.

இவைகள் இல்லாமலேயே நம்
வாழ்க்கை இனிமையானது;
ஏனெனில், நாம் வாழ்வது
மெய்வாழ்க்கை - சினிமா வாழ்க்கை அல்ல !!

No comments:

Post a Comment