Friday, 27 February 2015

Kavithai - 44

பூந்தோட்டம் 




வாழ்க்கை பூந்தோட்டமல்ல.
ஆனால், மனம் தளராமல் 
அதனுடன் போராடினால் 
அதை நாம் மாற்றலாம் 
அழகிய பூந்தோட்டமாக !
என்று சொன்னார்கள் முதியவர்கள்.

ஏழ்மையில் என் வாழ்க்கை 
இருந்தது பூந்தோட்டமாக.
ஆனால், பேராசை என்னும் வறட்சி 
எண்ணத்தை தாக்கியபின் 
எனது வாழ்க்கை மாறினது 
ஒரு பயனற்ற பாலைவனமாக !!!

No comments:

Post a Comment