தொடரும் பண்பாடு
தை மாதம் பிறந்தது - பொங்கல் திருவிழா வந்தது.
பொங்கல் கொண்டாட புது வழியும் பிறந்தது.
செங்கல் மூன்றை வைத்து - அடுப்பாக்கி,
விறகு அதில் தினித்து - நெருப்பூட்டி,
வட்ட வடிவ பானையை மேல் வைத்து,
பாலெனக் கருதி தண்ணீரை ஊற்றி,
கல் கலந்த ரேஷன் அரிசியை அதில் சேர்த்து,
பொங்கல் வைத்தோம், ஏழைகளாகிய நாங்கள் !
நீரில் வெந்த அரிசி கொதி எழுந்ததும்,
ஓலம் விட்டு, இறைவனை வணங்கி,
"பொங்கலோ பொங்கல்" என்று வாழ்த்தி,
பகிர்ந்துண்டு, பண்பாட்டை தொடர வைத்தோம் !!
தை மாதம் பிறந்தது - பொங்கல் திருவிழா வந்தது.
பொங்கல் கொண்டாட புது வழியும் பிறந்தது.
செங்கல் மூன்றை வைத்து - அடுப்பாக்கி,
விறகு அதில் தினித்து - நெருப்பூட்டி,
வட்ட வடிவ பானையை மேல் வைத்து,
பாலெனக் கருதி தண்ணீரை ஊற்றி,
கல் கலந்த ரேஷன் அரிசியை அதில் சேர்த்து,
பொங்கல் வைத்தோம், ஏழைகளாகிய நாங்கள் !
நீரில் வெந்த அரிசி கொதி எழுந்ததும்,
ஓலம் விட்டு, இறைவனை வணங்கி,
"பொங்கலோ பொங்கல்" என்று வாழ்த்தி,
பகிர்ந்துண்டு, பண்பாட்டை தொடர வைத்தோம் !!
No comments:
Post a Comment