Friday, 27 February 2015

Kavithai - 46

நினைவுகள் 



உன்னுடன் பழகிய நாட்கள்,
என் மனதிலிருந்து அகல மறுக்கிறது !

உனது இனிய குரலை,
என் காதுகள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன !

உனது அழகிய முகம்,
என் கண்களிலிருந்து மறைய மறுக்கிறது !

நாம் சுற்றி வந்த இடங்கள்,
நம் வருகைக்காக காத்துக்கொண்டே இருக்கின்றன !

நீ கொடுத்த வாக்குறுதிகள்,
என் இதயத்தை வாட்டிக்கொண்டே இருக்கின்றன !

உனக்கு மட்டும், அன்பே !
எப்படி மனது வந்தது என்னை விட்டு பிரிய ??

No comments:

Post a Comment