Friday, 27 February 2015

Kavithai - 50

எண்ணிக்கை



பாடினேன் ஸ்வரங்கள் ஏழு,
பெற்றேன் அறிவு ஆறு,
அறிந்தேன் கண்டங்கள் ஐந்து,
சுற்றினேன் திசைகள் நான்கு,
இரசித்தேன் கலைகள் மூன்று,
படித்தேன் காவியங்கள் இரண்டு,
காதலித்தேன் பெண் ஒருவர்,
ஆயினும், 
அவள் பிரிவால் ஆனேன் பூஜ்ஜியம் !!





பசுமை 



கற்களின் திட தன்மையும்,
பற்களின் தூய வெண்மையும்,
கொண்டது நம் காதல்.
சொற்களால் விவரிக்க முடியாத இக்காதல்,
சற்றோர்களால் நசுக்கப்பட்டாலும், என்றும் 
புற்களின் பசுமை கொண்டதாகவே இருக்கும்,
நம் காதல் வாழ்வின் நினைவுகள் !!

No comments:

Post a Comment