Monday, 12 January 2015

Kavithai - 34


சுமை 


அன்பே !
உன் காதல் 
என் இதயத்திற்கு 
ஒரு சுகமான சுமை.

உன் பிரிவோ,

என் இதயத்திற்கு 
ஒரு தாங்கமுடியா  பாரம் !




உலகம் 


வாழ்க்கை   - நம் இருவரையும் இணைத்து 
அது இனிமையானது என்று தெரிவித்தது.
உலகம்     -  நாம் இருவரையும் பிரித்து 
அது கொடியது என்று நிரூபித்தது.




உப்பு 



உப்பிட்டவனை மறவாதவனின் மனதும்
உப்பின் தூய வெள்ளை நிறமமே.
மறந்தவன் மனதோ,
உப்பில்லா பண்டமே !!



துன்பம் 


துன்பத்தை துன்பம்
என்று நினைத்தால்,
என்றும் துன்பமே; அதை,
வாழ்கையின் அங்கம்
என்று எடுத்துக்கொண்டால்
என்றும் இன்பமே.

துன்பத்தோடு போராடினால்,
மாறும் இன்பமாக அக்கணமே.
இல்லையேல்,
உயிர் பிரிந்தாலும்
உடலை விட்டுப் பிரியாது
எக்கணமும் !!!





No comments:

Post a Comment