வான்சிறப்பு
வான்சிறப்பு என்னும் பகுதியில் திருவள்ளுவர் மழையின் சிறப்பைவிட, மழை பெய்யாவிட்டால் நிகழும் அவஸ்திகளையும் , அவலங்களை பற்றியுமே அதிகம் எழுதியுள்ளார்.
மழையால் கிடைக்கும் பலன் :
1. மழையால் உயிர்கள் நிலைபெற்று வருகிறது.
2. மழைநீரே உணவாகவும், உணவை விளைவிக்கவும்,சமைக்கவும் பயன்படும்.
3. உயிர்களுக்கு வளம் சேர்ப்பது மழை.
மழை பெய்யாவிட்டால் என்னவாகும் :
1. எல்லா உயிர்களும் பசியால் வாடும்.
2. உழவுத்தொழில் குறைந்துவிடும்.
3. உயிர்வாழ்க்கை கெட்டுவிடும்.
4. மண்ணில் பசும்பொன் கூட காண இயலாது.
5. கடல் நீரும் வற்றிவிடும்.
6. வானத்தில் இருக்கும் தேவர்களுக்கு பூசை நடக்காது.
7. இவ்வுலகில் தானமும், தவமும் இராது.
8. மக்களிடையே, ஒழுக்கமும் கெட்டுவிடும்.
இக்காரணங்களால், மழை அமிழ்தம் என்று அழைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment