Tuesday, 10 December 2013

நீத்தார் பெருமை

நீத்தார் பெருமை 


நீத்தோரின் சில மகத்தான குணங்களை திருவள்ளுவர் இந்த பகுதியில் கூறியுள்ளார். அவைகளை சுருக்கமாக கீழே தந்துள்ளேன்:


1.  உயர்வு                   : சான்றோர் நூலில் உயர்வாக இடம் பெறுவர்.


2.  பெருமை              : நீத்தோர் பெருமையை அளவிடுதல், உலகில் இதுவரை இறந்தவர்களை கணக்கிடுவதைப் போன்ற ஒரு வீண் செயல்.

3.  அறிஞர்                 : இம்மையின் துன்பம், மறுமையின் இன்பம் - இவை         இரண்டையும் அறிந்தபின் துறவறம் மேற்கொண்டவர்கள்.

4.  மனவுறுதி            : மனவுறுதியால் ஐம்புலன்களையும்* அடக்கி காப்பவர்கள்.

5.  எடுத்துக்காட்டு : துறவறம் என்னும் வீட்டிற்கு சிறந்த விதை           போன்றவர்கள்.

6.  பெரியோர்           :  அறிய செயல்களை செய்ய வல்லவர்கள்.

7.  வாக்கு                   : நிறைவான வாக்கு உடையவர்கள்.

8.  கோபம்                 :  நீத்தோரின் கோபம் ஒரு கணமே இருக்கும் என்றாலும், அதிலிருந்து ஒருவரும் தப்ப இயலாது.

9.  அருள்                    :  எல்லா உயிர்களிடத்திலும் அருள் கொண்டு வாழ்பவர்கள்.




*மெய், வாய், கண், மூக்கு, செவி




No comments:

Post a Comment