நீத்தார் பெருமை
நீத்தோரின் சில மகத்தான குணங்களை திருவள்ளுவர் இந்த பகுதியில் கூறியுள்ளார். அவைகளை சுருக்கமாக கீழே தந்துள்ளேன்:
1. உயர்வு : சான்றோர் நூலில் உயர்வாக இடம் பெறுவர்.
2. பெருமை : நீத்தோர் பெருமையை அளவிடுதல், உலகில் இதுவரை இறந்தவர்களை கணக்கிடுவதைப் போன்ற ஒரு வீண் செயல்.
3. அறிஞர் : இம்மையின் துன்பம், மறுமையின் இன்பம் - இவை இரண்டையும் அறிந்தபின் துறவறம் மேற்கொண்டவர்கள்.
4. மனவுறுதி : மனவுறுதியால் ஐம்புலன்களையும்* அடக்கி காப்பவர்கள்.
5. எடுத்துக்காட்டு : துறவறம் என்னும் வீட்டிற்கு சிறந்த விதை போன்றவர்கள்.
6. பெரியோர் : அறிய செயல்களை செய்ய வல்லவர்கள்.
7. வாக்கு : நிறைவான வாக்கு உடையவர்கள்.
8. கோபம் : நீத்தோரின் கோபம் ஒரு கணமே இருக்கும் என்றாலும், அதிலிருந்து ஒருவரும் தப்ப இயலாது.
9. அருள் : எல்லா உயிர்களிடத்திலும் அருள் கொண்டு வாழ்பவர்கள்.
*மெய், வாய், கண், மூக்கு, செவி
No comments:
Post a Comment