Friday, 13 December 2013

அறன் வலியுறுத்தல்

அறன் வலியுறுத்தல் 



அறனின் (Virtue) பயன்களை விவரித்து கூறுவதே இப்பகுதியின் நோக்கம்.


அறன் செய்ய வேண்டிய வகை :


1. நமக்கு இயன்ற வகையால், இடைவிடாமலும், எல்லா இடங்களிலும் செய்ய வேண்டும்.

2. மனதை தூய்மையாய் வைப்பதே அறன்.

3. பொறமை, ஆசை, சினம், கடுஞ்சொல் என்பவைகளை விலக்கி வாழவேண்டும்.

4. மறுநாளுக்கு தள்ளி போடாமல் உடனே நல்ல காரியங்களை  செய்ய வேண்டும்.

5. ஒரு நாளும் வீணாக்காமல் அறன் செய்ய வேண்டும்.

6. செய்யதக்க எல்லா நன்மைகளுமே அறன்.


அறனின் பலன்கள் :


1. சிறப்பு, மற்றும் செல்வத்தை தரும்.

2. ஆக்கம் (நன்மை) தரும்.

3. இறந்தபின்னும் நமக்கு அழிவில்லாத துணையாய் இருக்கும்.

4. பல்லக்கில்  இருந்து செல்பவர்களை போல் மகிழ்வுடன் பயணம் செய்வார்கள்.

5. மறுபிறவியை அடைக்கும் கல்லாக அமையும்.

6. அறத்தோடு வரும் இன்பம்.


அறன் கடைபிடியாவிட்டால் என்ன?


1. அறன் செய்ய மறுப்பது கேடு தரும்.

2. அறனில்லா செயல்கள் எல்லாம் வெறும் வேஷம்.

3. பல்லக்கை தூக்கி செல்பவர்களைப் போல், இன்பம் இல்லாமலும், வாழ்க்கை பெரும் சுமையாய் இருக்கும்.

4. அறத்தோடு பொருந்தாமல் வரும் புகழ் ஏதும் புகழ் இல்லை.

5. தீய செயல்கள் விட்டுவிட தக்கவை.













No comments:

Post a Comment