அன்னதானம்
மகாபாரதத்திலுள்ள கர்ணன் இறந்தபின் சொர்கத்தில் சேர்க்கப்பட்டான். சொர்கத்தில் சில நாட்களுக்கு பின் அவனுக்கு பசி எடுத்தது. 'சொர்கத்தில் பசி எப்படி எடுக்கும்? நான் ஏதாவது தவறு செய்துள்ளேனோ' என்று கடவுளின் தூதனிடம் கேட்டான்.
'கர்ணா நீ பூலோகத்தில் பல தானங்கள் செய்துள்ளாய். அனால், நீ உன் வாழ்நாளில் அன்னதானம் ஒரு போதும் செய்ததில்லை. அதனால் உனக்கு இங்கு பசி எடுக்கிறது' என்றார் தூதர்.
'பசி வாட்டுகிறதே! எனக்கு இதிலிருந்து மீள ஏதாவது வழி இருக்கிறதா?' என்று கர்ணன் கேட்டான். அந்த தூதன் அவன் வரலாறை புரட்டி பார்த்துவிட்டு ஒரு வழி சொன்னார். 'உன் ஆள்காட்டி விரலை நீ வாயில் சூப்பினால் பசி நின்றுவிடும்' என்றார். கர்ணன் அப்படியே செய்தான். பசி அடங்கிவிட்டது. 'இது எப்படி என்று கர்ணன் விழக்கம் கேட்டான்.
'ஒரு நாள் நீ ஒரு இடத்திலிருந்து அரண்மனை திரும்புகிறபோது சில முனிவர்கள் உன்னிடம் அன்னம் கேட்டார்கள்.என்னிடம் இப்பொழுது அன்னம் இல்லை, நீங்கள் அதோ அங்கிருக்கும் கோவிலுக்கு போனால் இப்பொழுது அன்னதானம் செய்வார்கள். நீங்கள் அங்கே செல்லுங்கள் என்று நீ உன் ஆள்காட்டி விரலை அவர்களுக்கு நீட்டி வழி காட்டினாய்.அன்று நீ செய்த சிறு உதவியே உனக்கு பசியை போக்குகிறது', என்றார் தூதன்.
மகாபாரதத்திலுள்ள கர்ணன் இறந்தபின் சொர்கத்தில் சேர்க்கப்பட்டான். சொர்கத்தில் சில நாட்களுக்கு பின் அவனுக்கு பசி எடுத்தது. 'சொர்கத்தில் பசி எப்படி எடுக்கும்? நான் ஏதாவது தவறு செய்துள்ளேனோ' என்று கடவுளின் தூதனிடம் கேட்டான்.
'கர்ணா நீ பூலோகத்தில் பல தானங்கள் செய்துள்ளாய். அனால், நீ உன் வாழ்நாளில் அன்னதானம் ஒரு போதும் செய்ததில்லை. அதனால் உனக்கு இங்கு பசி எடுக்கிறது' என்றார் தூதர்.
'பசி வாட்டுகிறதே! எனக்கு இதிலிருந்து மீள ஏதாவது வழி இருக்கிறதா?' என்று கர்ணன் கேட்டான். அந்த தூதன் அவன் வரலாறை புரட்டி பார்த்துவிட்டு ஒரு வழி சொன்னார். 'உன் ஆள்காட்டி விரலை நீ வாயில் சூப்பினால் பசி நின்றுவிடும்' என்றார். கர்ணன் அப்படியே செய்தான். பசி அடங்கிவிட்டது. 'இது எப்படி என்று கர்ணன் விழக்கம் கேட்டான்.
'ஒரு நாள் நீ ஒரு இடத்திலிருந்து அரண்மனை திரும்புகிறபோது சில முனிவர்கள் உன்னிடம் அன்னம் கேட்டார்கள்.என்னிடம் இப்பொழுது அன்னம் இல்லை, நீங்கள் அதோ அங்கிருக்கும் கோவிலுக்கு போனால் இப்பொழுது அன்னதானம் செய்வார்கள். நீங்கள் அங்கே செல்லுங்கள் என்று நீ உன் ஆள்காட்டி விரலை அவர்களுக்கு நீட்டி வழி காட்டினாய்.அன்று நீ செய்த சிறு உதவியே உனக்கு பசியை போக்குகிறது', என்றார் தூதன்.
No comments:
Post a Comment