Saturday, 30 November 2013

காணிக்கை

காணிக்கை 


ஒரு நாள், ஒரு செல்வந்தர் இறைவனிடம் ஒரு வேண்டுகோளை வைத்தார்.
"நீங்கள் இந்த காரியத்தை செய்து தந்தால், நான் உங்களுக்கு 100 வாழைப்பழம் காணிக்கையாக தருவேன்" என்று நேந்தார்.  அவர் வேண்டுகோள் நிறைவேறியது.

செல்வந்தர், 100 வாழைப்பழங்களை தன் வேலைக்காரனிடம் கொடுத்து, அவர் வேண்டிய கடவுளின் கோவிலுக்கு அனுப்பினார். கோவில் சில மைல் அப்பால் இருந்தது. வேலைக்காரன் பழங்களை சுமந்துக்கொண்டு சென்றான்.

வழியில் வேலைக்காரனுக்கு பசி எடுத்தது. அவனுக்கு சாப்பிட ஒன்றும் இல்லை. பசி தாங்க முடியவில்லை. உடனே, அவன் சுமந்துக்கொண்டிருந்த பழங்களிலிருந்து 5 வாழைப்பழங்களை தின்றுவிட்டான். மீதமுள்ள 95 பழங்களை அவன் கோவிலுக்கு படைத்துவிட்டு, எஜமானின் வீட்டிற்க்கு திரும்பினான்.

இரவில் அந்த செல்வந்தரின் கணவில் கடவுள் தோன்றினார். செல்வந்தரிடம் கேட்டார், "மகனே, நீ எனக்கு 100 வாழைப்பழங்களை படைப்பதாக கூறினாய். ஆனால், எனக்கு வந்து சேர்ந்ததோ 5 பழங்கள் மட்டுமே. மீதமுள்ள 95 பழங்கள் எங்கே?"

வேலைக்காரனிடம் விசாரித்தபோது, அவன் அறிந்துக்கொண்டான். ஏழை உண்ட 5 பழங்கள் கடவுளுக்குப்  போய் சேர்ந்துவிட்டது. கோவிலில் வைத்த 95 பழங்கள் கடவுளைப்போய் சேரவில்லை.

உண்மையான காணிக்கை என்ன என்பதை அந்த செல்வந்தர் புரிந்துக்கொண்டார் !

No comments:

Post a Comment