கடவுள் வாழ்த்து
6. பொரிவாயில் ஐந்தவித்தான் - மெய், வாய், கண், மூக்கு,செவி என்னும்
8. அறவாழி அந்தணன் - அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவாக
3. இருவினையும் சேராது - நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினைகளின் தாக்கமும் நம் வாழ்வில் இராது.
திருவள்ளுவர் தனது 1330 குறள்களில் 10 குறள்களில் மட்டும் கடவுளை பற்றி எழுதியுள்ளார். இறைவனை பெயர் சொல்லி அழைக்கவில்லை,மதம் சொல்லவில்லை. இறைவனின் தன்மைகளை மட்டும் வர்ணித்துள்ளார். சுருக்கத்தில் இங்கு எழுதி இருக்கிறேன் :
1. ஆதி பகவான் முதலே உலகு - உலகிற்க்கு முதன்மையானவன்.
2. வாலரிவன் - மெய் உணர்வினை உடையவன்.
3. வேண்டுதல் வென்டாமை இலான் - எந்த பொருளையோ விரும்புபவனோ வெறுப்பவனோ இல்லை.
4. இருள்சேர் இருவினையும் சேரான் - நல்வினை, தீவினை என்ற இரு வினைகளையும் சாரான்.
5. மலர்மிசை ஏகினான் - மலர் போன்ற மனங்களில் வசிப்பவன்.
6. பொரிவாயில் ஐந்தவித்தான் - மெய், வாய், கண், மூக்கு,செவி என்னும்
பொறிகள் வழியாக வரும் அவாவினையும் அறுத்தவன்.
7. தனக்குவமை இல்லாதான் - தனக்கு நிகர் யாரும் இல்லாதவன்.
8. அறவாழி அந்தணன் - அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவாக
கொண்ட குணசீலன்.
9. எண்குணாத்தான் - எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுள்.
10. பொருள்சேர் புகழ் புரிந்ததுன்பங்களே வராது.
இறைவனை வாழ்த்துவதோடும், வர்ணிப்பதோடும் மட்டும் இல்லாமல், இறைவனின் பாதங்களில் சரண் அடைபவர்களுக்கும், தொழுபவர்களுக்கும் கிடைக்கும் பலன்களையும் வள்ளுவர் பட்டியல் இட்டுள்ளார் :
1. நிலமிசை நீது வாழ்வார் - உலக வாழ்க்கையில் பல காலங்கள் வாழ்வார்கள்.
2. யாண்டும் இடும்பை இல - துன்பங்களே வராது.
3. இருவினையும் சேராது - நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினைகளின் தாக்கமும் நம் வாழ்வில் இராது.
4. பிறவி பெருங்கடல் நீந்துவர் - துன்பம் தரும் மறுபிறவிகளை தவிர்ப்பர்.
இறைவனின் காலடி தொழாதவர்களிடம் வரும் தீமைகள் :
1. கற்றதால் பயன் இல்லை.
2. மனக்கவலை நீக்கல் அரிது.
3. பிறவாழி நீந்தல் அரிது - மறுபிறவிகளை கழைய முடியாது.
4. கோளில் பொறியின் குணம் இராது.
ஆஹா அணைத்து பதிவுகளுமே மிக மிக அருமை ....வாழ்க வளமுடன்
ReplyDelete