Saturday, 30 November 2013

கல், கடைசிவரை

கல், கடைசிவரை 


சாக்ரேட்ஸ் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தார். அவர் இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன் சிறையிலிருந்தபோது, ஒருவன் இனிமையாக யாழ் வாசிப்பதைக் கேட்டார். சாக்ரேட்ஸுக்கு அந்த யாழ் இசை பிரியமகிவிட்டது.

சாக்ரேட்ஸ், சிறைக் காவலனை கூப்பிட்டு, "அந்த மனிதன் யாழ் மிக இனிமையாக வாசிக்கிறானே! எனக்கு அந்த யாழை வாசிக்க கற்றுக்  கொள்ள வேண்டும். அவனை இங்கு அழைத்து வாருங்கள்", என்றார். அதற்கு, அந்த சிறைக்காவலன், "நீங்கள் இன்னும் 10 நாட்களில் இறக்க போகிறீர்கள். இப்பொழுது நீங்கள் அதை வாசிக்க கற்று என்ன பயன் ?" என்றான்.

சாக்ரேட்ஸ் சொன்ன பதிலோ : நான் இறப்பதற்கு முன், இன்னும் ஒரு கலையை கற்று கொண்டு சாக விரும்புகிறேன் !!!

No comments:

Post a Comment